Friday, October 11, 2019

நெஞ்சு பதைக்கிறது

நெஞ்சு பதைக்கிறது  :

மேல் சட்டை  இல்லாமல்  ஒரு மேல்தட்டு சாரார்  வாழ்வதை  ஆனந்த  ஆன்மிக காட்சியாகவும் அதே மேல் சட்டை இல்லாமல் ஒரு ஒடுக்கப்பட்ட பின்தங்கிய  சமூகம் வாழ்வதை  அன்றாட  காட்சியாகவும் பார்க்கிறது  இந்த புத்திஸ்வாதீனமில்லாத  சமூகம் ....இந்த தீ வெப்ப  ஆராதனை  வழிபாடுகள் மற்றும் மஞ்சள்  குங்குமம் பால் நெய்  உபயோகங்கள்   கோவில்களில்  இருப்பதால்  அந்த வழிபாடு    வேலைகளில் ஈடுபடுவோர்  மேல் சட்டை அணியாமல்  வேலை செய்வது  இன்றியமையாத  ஒன்றாக  அமைந்து  விடுகிறது  ... சவுகரியங்களுக்காக துறந்த  மேல் ஆடையை சாஸ்திரத்தோடு  நூல்  கொண்டு  கோர்த்து கடவுள் நம்பிக்கை , இந்து  சமய  நம்பிக்கையை  மக்களிடையே  தந்திரமாக  பரப்பி   தன் சமூக அந்தஸ்தை உயர்த்தி சாமர்த்தியமாக  இந்த சமூகத்தில் ஒரு ஏற்ற தாழ்வை  ஒளிரவைத்து  குளிர்  காய்ந்து கொண்டு இருக்கிறது ஒரு சமூகம் .... இந்த புரிதல்  கூட இல்லாமல் ஆட்டு  மந்தை  போல சமூக ஏற்ற தாழ்வை கடவுள் அமைத்து குடுத்த மேடை  போல அலங்கரித்து கொண்டாடுறார்கள்  தன்நிலை மறந்த  என்  மேலான மக்கள் ....

நெஞ்சு பதைக்கிறது !